ஜித்ரா, நவம்பர் 25 :
நேற்றிரவு கோடியாங்கில் நடத்தப்பட்ட “Op Motosikal” நடவடிக்கையில் மோட்டார் சைக்கிள் சாகசம், பந்தயம் போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட்டதாக நம்பப்படும், கைது செய்யப்பட்ட ஒன்பது வாலிபர்களின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் தங்கள் பிள்ளைகளை பொறுப்பேற்பதற்காக போலீஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டனர் என்று குபாங் பாசு மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் ரோட்ஸி அபு ஹாசன் தெரிவித்தார்.
அப்பகுதிக் குடியிருப்பாளர்களின் அமைதியைக் குலைக்கும் வகையில் சத்தம் எழுப்பி மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் இருந்து போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளன.
அதனடிப்படையில், குபாங் பாசு மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் புலனாய்வு மற்றும் போக்குவரத்து அமலாக்கப் பிரிவு ஆகியன இன்ஸ்பெக்டர் வான் மசுவான் வான் மஹ்மூட் தலைமையிலான போலீஸ் குழு, இரவு 10 மணியளவில் கோடியாங்கின் ஜாலான் கம்போங் மெலேலே மற்றும் ஜாலான் கம்போங் பாடாங் சேரா (ஜலான் ஜித்ரா-) பகுதிகளில்”Op Motosikal” நடவடிக்கையை நடத்தியது.
இதில் “13 முதல் 18 வயதுக்குட்பட்ட 92 சிறுவர்களை போலீஸ் சோதனை செய்தது. அதில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு IPD குபாங் பாசுவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், அதற்கு முன்பு அந்தந்த குடும்பங்களின் பிணையில் விடுவிக்கப்பட்டனர் என்று அவர் கூறினார்.
மேலும் “பதிவு எண்கள், பக்கவாட்டு கண்ணாடிகள் (10), ஓட்டுநர் உரிமம் இல்லை, சாலை வரி இல்லை, காப்பீடு இல்லை, ஹெல்மெட் அணியாதது மற்றும் மோட்டார் சைக்கிள்களை மாற்றியமைத்தல் போன்ற பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக மொத்தம் 86 சம்மன்கள் விதிக்கப்பட்டன,” என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.