ரவூப், நவம்பர் 28 :
நேற்று சுங்கை கெனாங்கில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் வீடுகள் மூழ்கியதால், இங்குள்ள ஃபெல்டா தெர்சாங் மற்றும் கம்போங் தெர்சாங்கில் உள்ள மொத்தம் 60 குடியிருப்பாளர்கள் அங்குள்ள இரண்டு தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
“ஃபெல்டா தெர்சாங் மற்றும் கம்போங் தெர்சாங்கில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகக் கூறி ஏபிஎம் ரவூப்ப்புக்கு இரவு 7 மணியளவில் பொதுமக்களிடமிருந்து அழைப்பு வந்தது என்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கும் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களைப் பெறுவதற்கும் குடிமைத் தற்காப்புப் படை உறுப்பினர்கள் குழு ஒன்று சம்பவம் நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டது,” என்று குடிமைத் தற்காப்புப் படை (ஏபிஎம்) அதிகாரியும், ரவூவ் மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழு செயலகத்தின், கேப்டன் (பிஏ) சமாசுதீன் கம்படே கூறினார்.
இன்று காலை 9 மணி நிலவரப்படி, குறித்த பகுதியில் இன்னமும் தண்ணீர் வடியாததால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அங்குள்ள இரண்டு நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று மேலும் கூறினார்.