நீதிமன்ற வழக்குகளை எதிர்கொள்ளும் அரசியல்வாதிகளை பிரதமர் அன்வார் இப்ராஹிம் தனது அமைச்சரவையில் இருந்து விலக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ரஃபிடா அஜீஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இவர் முன்னாள் சர்வதேச வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சராக இருந்தவர்.
நீதிமன்ற வழக்குகளில் உள்ளவர்களை அமைச்சரவையில் நியமிப்பது நாட்டின் நன்மதிப்பைக் கெடுக்கும் என்று அவர் கூறினார். இந்த நபர்கள் அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்கக்கூடாது. இப்போது மக்களுக்கு நம்பகமான மற்றும் மரியாதைக்குரிய ஒரு திறமையான குழு தேவை, நாட்டை மேம்படுத்தும் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர்கள் தேவை என்று அவர் கூறினார்.
செதியவாங்சா நாடாளுமன்ற உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அஹ்மட் கூறுகையில், அன்வாரின் அமைச்சரவையில் நீதிமன்ற வழக்குகளில் உள்ளவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கக் கூடாது என்று கூறினார். இது இன்றியமையாதது என்றும், அவர்கள் எதிர்கொள்ளும் வழக்கு வசாரணைகளில் இன்னும் குற்றவாளிகளாகக் கண்டறியப்படவில்லை என்பது முக்கியமல்ல என்றும் அவர் கூறினார்.
அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, டிஏபி தலைவர் லிம் குவான் எங், மூடாவின் தலைவர் சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான் மற்றும் சபா அம்னோ தலைவர் பங் மொக்தார் ராடின் ஆகியோர் நீதிமன்ற வழக்குகளில் உள்ள எம்பிக்கள்.
அன்வார் தலைமையிலான ஐக்கிய அரசாங்கம் பக்காத்தான் ஹராப்பான் (PH), பாரிசான் நேஷனல் (BN), கபுங்கன் பார்ட்டி சரவாக் (GPS) மற்றும் கபுங்கன் ரக்யாட் சபா (GRS) ஆகியவற்றை உள்ளடக்கியது, மூடா, வாரிசன், பார்ட்டி பங்சா மலேசியா (PBM) மற்றும் சுயேச்சைகளின் ஆதரவை கொண்டுள்ளது.