மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா, கடந்த வியாழன் பதவியேற்ற பிறகு பிரதமரான அன்வார் இப்ராஹிமை முதன்முறையாக சந்தித்துள்ளார். இஸ்தானா நெகாரா தனது முகநூல் பதிவில்,மாமன்னரும் பிரதமரும் மாலை 5 மணிக்கு சந்தித்ததாகக் கூறினார்.
15ஆவது பொதுத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் நீடித்த அரசியல் முட்டுக்கட்டைக்குப் பிறகு, நவம்பர் 24 அன்று இஸ்தானா நெகாராவில் சுல்தான் அப்துல்லா முன்னிலையில் அன்வார் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
பக்காத்தான் ஹராப்பான், பாரிசான் நேஷனல், கபுங்கன் பார்ட்டி சரவாக் மற்றும் கபுங்கன் ரக்யாட் சபா, ஆகிய கட்சிகளையும் மூடா, வாரிசான், பார்ட்டி பங்சா மலேசியா, Parti Kesejahteraan Demokratik Masyarakat மற்றும் இரண்டு சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை உள்ளடக்கிய ஒரு ஒற்றுமை அரசாங்கத்தை அன்வார் வழிநடத்துகிறார்.