கோத்தா பாரு, நவம்பர் 30 :
கிளாந்தான் மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்கள் RM1,500 சிறப்பு நிதி உதவி பெற்றுக்கொள்வார்கள் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த சிறப்பு நிதி உதவித்தொகை வழங்கப்படும் என்றும், மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் இந்த உதவி வழங்கப்படும் என்றும் துணை மந்திரி பெசார் டத்தோ முகமட் அமர் நிக் அப்துல்லா கூறினார்.
“மாநில அரசின் நிதிச் செயல்பாடுகள் மேம்பட்டு வருவதால், கடின உழைப்பாளிகளான அரசு ஊழியர்களைப் பாராட்ட வேண்டிய தருணம் இது. எனவேதான் அரசு ஊழியர்களுக்கு RM1,500 சிறப்பு நிதி உதவி வழங்க நாங்கள் ஒப்புக்கொண்டோம். இது மொத்தத் தொகை RM13 மில்லியனை உள்ளடக்கியது என்றும் அடுத்த ஆண்டு ஜனவரியில் செலுத்தப்படும் என்றும் ” அவர் கூறினார்.
இன்று நடந்த கிளாந்தான் மாநில சட்டப் பேரவை (DUN) மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.