கோலாலம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தினால் பாதிப்பு

கோலாலம்பூரின் பல்வேறு பகுதிகள் புதன்கிழமை (நவம்பர் 30) மதியம் பெய்த மழையால் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. நகர மையத்தைச் சுற்றியுள்ள ஜாலான் சையத் புத்ரா, ஜாலான் மகாராஜலேலா, ஜாலான் ராஜா சூலான் (மியூசம் டெலிகாம்), ஜாலான் ராஜா, ஜாலான் பார்லிமென், ஜாலான் துன் பேராக் மற்றும் ஜாலான் டாமன்சாரா ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஜாலான் புடு, ஜாலான் மரோஃப், ஜாலான் முன்ஷி அப்துல்லா, லெபுராயா சுல்தான் இஸ்கந்தர், ஜாலான் டிராவர்ஸ், ஜாலான் கூச்சிங் ஆகியவை பாதிக்கப்பட்ட பிற பகுதிகள். அத்துடன் மெனாரா DBKL 1 க்கு வெளியே கணுக்கால் உயரம் அல்லது அதிக நீர் நிலைகள் காணப்படுகின்றன. இப்பகுதிகளில் சாலைகள் வெள்ள நீரால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here