டிச.8ஆம் தேதி பேரணியா? செய்தியில் உண்மையில்லை என்கிறார் போலீஸ் படைத்தலைவர்

வரும் டிசம்பர் 8ஆம் தேதி பேரணி எதுவும் நடைபெறாது என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி  கூறுகிறார். தற்பொழுது வைரலாகி வரும் வீடியோ 2018 இல் எடுக்கப்பட்டது. சனிக்கிழமை (டிசம்பர் 3) ஒரு அறிக்கையில் அக்ரில் சானி, இரண்டு நிமிடம் 20 வினாடிகள் கொண்ட வீடியோ 2018 ஆம் ஆண்டிலிருந்து எடுக்கப்பட்டது என்றும், அனைத்து வகையான இனப் பாகுபாடுகள் (Icerd) பிரச்சினையை நீக்குவதற்கான அனைத்துலக மாநாடு குறித்த பேரணியைக் குறிப்பிடுவதாகவும் கூறினார்.

பொது அமைதியின்மை மற்றும் குழப்பத்தைத் தூண்டும் நோக்கத்துடன் பொறுப்பற்ற கட்சிகளால் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. அவர்கள் பேரணி டிசம்பர் 8, 2022 அன்று நடைபெறும் என்று குறிப்பிட்டிருந்தனர். அன்றைய தேதியில் பேரணி குறித்து எந்த தகவலும் இல்லை என்பதால் இது உண்மையல்ல என்றார். பொது அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எவருக்கும் எதிராக போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பர் என்று  போலீஸ் படைத்தலைவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here