வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நீர்ப் பெருக்கு அபாயம் ; கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல்

கோலாலம்பூர், டிசம்பர் 8 :

இன்று முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை (டிச.11) வரை ஏற்படக்கூடிய நீர்ப் பெருக்கு குறித்து கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நீர்ப் பெருக்கினால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று தேசிய நீர் வரைவியல் மையம் (PHN) ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள ஒரு பதிவின் மூலம் தெரிவித்துள்ளது.

தற்போதைய வானிலையை தொடர்ந்து கண்காணிக்கவும், கடலோரப் பகுதி பாதுகாப்புத் தகவல்களுக்கு தொடர்புடைய நிறுவனங்களை அணுகுமாறும் பொதுமக்களுக்கு அது அறிவுறுத்தியுள்ளது.

அலை அளவுகள் பற்றிய கூடுதல் தகவல்களை https://hydro.gov.my/ramalanpasangsurut/ இல் அணுகலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here