கிளாந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நேற்று இரவு 9 மணி நிலவரப்படி, மொத்தம் 2,018 பேர் அங்குள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
infobencanajkmv2.jkm.gov.my இணையதளத்தின்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகளவானோர் (635 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்) பாசீர் மாஸில் உள்ள ஏழு நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.