தானா மேராவிலுள்ள சந்தையில், செவ்வாய்கிழமை (டிச. 13) அன்று ஒரு பெண் வணிகரின் பணம் மற்றும் தங்க நகைகள் அடங்கிய கைப்பையை திருடியதாகக் கூறப்படும் இல்லத்தரசியை கிளாந்தான் போலீசார் கைது செய்தனர் என்று தானா மேரா மாவட்ட காவல்துறைத் தலைவர், முகமட் ஹாக்கி ஹஸ்புல்லா தெரிவித்தார்.
டிசம்பர் 13 ஆம் தேதி மாலை 5 மணியளவில் நடந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர் தனது மளிகைக் கடையை மூடுவதற்காக தயார் செய்து கொண்டிருந்தபோது, தனது கைப்பை காணாமல் போனதை உணர்ந்தார்.
“அருகிலுள்ள கடையிலிருந்த கண்காணிப்பு கேமராவிலுள்ள காட்சிகளின் அடிப்படையில், 30 வயதுடைய பெண் ஒருவர் பாதிக்கப்பட்டவரின் கடைக்குள் நுழைந்து, RM1,500 ரொக்கம், மூன்று தங்க நெக்லஸ்கள், இரண்டு தங்க வளையல்கள் மற்றும் RM21,000 பெறுமதியான ல்வேறு முக்கிய ஆவணங்கள் அடங்கிய கைப்பையுடன் சென்றதைக் காட்டியது. ,” என்று அவர் இன்று மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
திருமணமாகி 8 மற்றும் 11 வயதுடைய இரண்டு குழந்தைகளைக் கொண்ட குறித்த பெண்மணி, புதன்கிழமை (டிசம்பர் 14) இரவு 8 மணியளவில் கோத்தா பாருவின் கம்போங் சலோரில் உள்ள அவரது வீட்டிற்கு அருகில் கைது செய்யப்பட்டார்.
முதற்கட்ட விசாரணையில், சந்தேக நபர் திருடப்பட்ட தங்கப் பொருட்களை கோத்தா பாருவில் உள்ள ஒரு நகைக்கடைக்காரருக்கு விற்றதாகக் கண்டறியப்பட்டது.
“சந்தேக நபர் டிசம்பர் 18 வரை நான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்” என்று அவர் கூறினார்.