ஜாலான் பகாவ்-ரோம்பின் சாலையின் 3வது கிலோமீட்டரில் நேற்று நண்பகல் நடந்த விபத்தில், ஒருவர் ஓட்டிச் சென்ற கார் சாலை வழிகாட்டி அறிவிப்பு பலகை மீது மோதிய பின்னர் மரத்தில் மோதியதில் ஓட்டுநர் உயிரிழந்தார், அவரின் மனைவி காயமடைந்தார்.
மாலை 4.10 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் பகாங்கின் கெமாயானில் வசிக்கும் லோகே கோக் லியோங் (55) என்பவர் என உறுதி செய்யப்பட்டது. அவரது மனைவி வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்
விசாரணையின்படி, பாதிக்கப்பட்டவர் அவரது மனைவியுடன் ரோம்பினில் இருந்து கெமாயான் நோக்கிச் சென்றபோது விபத்து ஏற்பட்டது.
“சம்பவம் நடந்த இடத்திற்கு வந்தபோது, அவர் ஓட்டிவந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் எதிர் திசையில் வலதுபுறமாக சறுக்கி, சாலை வழிகாட்டி அறிவிப்பு பலகை மீது மோதி பின்னர் மரத்தில் மோதியதாக நம்பப்படுகிறது.
இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டம் (ஏபிஜே) 1987 பிரிவு 41 (1) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.
இதற்கிடையில், ஜெம்போல் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் ஹூ சாங் ஹூக் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.