ஏழு தசாப்தங்களை தன் குரலால் ஆண்ட இசைபேரரசி பாடகி ஜானகி

பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி (88), வயது முதிர்வு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவு, திரை உலகில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவிற்கு திரை உலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல பிண்ணனி பாடகி ஜானகி இந்தியாவின் புகழ் பெற்ற திரைப்படப் பாடகி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்படப் பல இந்திய மொழிகளில் 48 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர். பல பாடல்களைத் தாமே எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார். 4 முறை தேசிய விருது பெற்றவர்.

பத்ம பூஷண் விருதை ஏற்க மறுப்பு

இதைத் தொடர்ந்து பல படங்களில் பாடும் வாய்ப்புக் கிட்டியது. 25 ஆண்டுகளில் தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல், கொங்கினி, துளு, சௌராஷ்டிரம், இந்தி, வங்காளம், சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆயிரக்காணக்கான பாடல்களைப் பாடினார்.

1992 -ம் ஆண்டில் இலங்கை சென்றிருந்த போது இவருக்கு ஞான கான சரஸ்வதி என்ற பட்டம் வழங்கப்பட்டது. தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பக்திப்பாடல்களைத் தாமே எழுதி இசையமைத்துப் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மவுன போராட்டம் என்ற தெலுங்குப் படத்திற்கு முதன் முதலில் இசையமைத்திருக்கிறார். ௭ஸ் ஜானகி 2013 ஆம் ஆண்டு தனக்கு கிடைக்கவிருந்த பத்ம பூஷண் விருதை ஏற்க மறுத்து விட்டார். இவ்விருது தனது 55 ஆண்டுகால அனுபவத்திற்கு தாமதமாக வந்துள்ளது ௭ன கூறிவிட்டார்.

இவரது கணவர் காலஞ்சென்ற ராம் பிரசாத். தனது மகன் முரளி கிருஷ்ணாவுடன் சென்னையில் வாழ்ந்து வந்த நிலையில், பாடகி எஸ்.ஜானகியின் ஒரே மகன் முரளி கிருஷ்ணா கடந்த ஜனவரி மாதத்தில் காலமானது குறிப்பிடத்தக்கது. முரளி கிருஷ்ணா சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

வாக்குறுதி அளித்த ஜானகி

2018-ல் இனிமேல் பாடப்போவதில்லை என அறிவித்தார் ஜானகி. 2016-ல் மலையாளப் படத்துக்காக தாலாட்டு பாடல் ஒன்றைக் கடைசியாகப் பாடினார். எனினும் பண்ணாடி என்கிற படத்துக்காக இரு பாடல்களைப் பாடியதாகத் தகவல் வெளியானது. அப்பாடல்களுக்கு இசையமைத்த ராஜேஷ் ராமலிங்கம், 2012-ல் ஒரு பாடலுக்காக ஜானகியை அணுகியுள்ளார். ஆனால் அப்போது தொண்டையில் கிருமித் தொற்று ஏற்பட்டதால் பாட முடியாமல் போனது. அடுத்த முறை நிச்சயம் பாடித் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார் ஜானகி. அதைக் காப்பாற்றுவதற்காக ராஜேஷ் ராமலிங்கம் மீண்டும் அணுகியபோது மறுப்பு சொல்லாமல் பாடிக்கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here