கார் சாலைத் தடுப்பில் மோதியதில், பதின்ம வயது வாலிபர்கள் மூவர் உயிரிழந்தனர் – இருவர் காயம்

இன்று அதிகாலை ஜாலான் அலோர் ஸ்டார் – பட்டர்வொர்த் சாலையின் 53.5 ஆவது கிலோமீட்டரில் ஹோண்டா ரக கார் சாலைத் தடுப்பில் மோதியதில், மூன்று இளைஞர்கள் இறந்தனர், மேலும் இருவர் காயமடைந்தனர்.

அதிகாலை 2.30 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், கார் ஓட்டுநர் முஹமட் அய்மான் ருஸ்தி, 17, மற்றும் காரில் பயணஞ்செய்த முஹமட் இசானி முகமட் துவா, 15, முகமட் இமான் முகமட் அகிர், 17, ஆகியோர் உயிரிழந்தனர்.

குறித்த மூன்று வாலிபர்களும் அனைவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர் என்றும் அவர்களது நண்பர்களான, முஹமட் சுல்ஹகிம் சுல்கைரி, 17, பலத்த காயமடைந்து சுங்கை பட்டாணியில் உள்ள சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனையில் (HSAH) சிகிச்சை பெற்றார் என்றும் மற்றொரு நண்பர் லேசான காயமடைந்தார் என்றும் கோல மூடா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் ஜைதி சே ஹாசன் தெரிவித்தார்.

வாலிபர்கள் பயணித்த கார், பாக்கார் ஆராங் திசையிலிருந்து பாடாங் தெமுசுவை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ​​கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடது பக்க சாலைத்தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

“சம்பந்தப்பட்ட கார் அதிக வேகத்தில் இயக்கப்பட்டதாக நம்பப்படுகிறது, இதன் காரணமாக காரின் ஓட்டுநர் மற்றும் முன் இருக்கை பயணி மற்றும் பின் இருக்கையில் பயணஞ் செய்த மூன்றுபேரில் ஒருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர் என்று அவர் கூறினார்.

இறந்த மூன்று இளைஞர்களின் உடல்கள் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய, பிரேத பரிசோதனைக்காக HSAH தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டது.

“இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 41(1) இன் படி விசாரிக்கப்பட்டு வருகிறது” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here