நாட்டின் ஒன்பது மாநிலங்களில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பகாங், சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர், சபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்கள் இந்த வானிலையை எதிர்கொள்ளலாம் என்றும் மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சபாவில் மேற்கு கடற்கரை, தாவாவ், சண்டகான், கூடாட் மற்றும் லாபுவான் ஆகிய பகுதிகள் மற்றும் சரவாக்கில், கூச்சிங், சமரஹான், பெட்டாங், சரிகேய், சிபு மற்றும் முக்காஹ் ஆகிய இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இன்று மாலை வட மாநிலங்களான கெடா மற்றும் பேராக் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் பூலாவ் பினாங்கில் காற்றுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படுகிறது என்று அது மேலும் தெரிவித்துள்ளது.