பெசூட்:
கடந்த டிசம்பர் 18 அன்று ஏற்பட்ட வெள்ளத்தின் இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, திரெங்கானு மாநிலத்தில் கடைசியாக இயங்கி வந்த நிவாரண மையமும் இன்று நண்பகல் மூடப்பட்டது.
பருவமழை வெள்ளத்தின்போது, மாநிலத்தில் உள்ள மொத்தம் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 40,000 க்கும் மேற்பட்ட மக்கள் 315 நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.