அம்னோ பொதுப் பேரவைக்கு இதர கட்சிகளை அழைப்பதா?இல்லையா என்பது குறித்து வியாழக்கிழமை முடிவெடுக்கப்படும்

கோலாலம்பூர்: அம்னோவின் உச்ச மன்றக் கூட்டம் வியாழன் கூடும்போது  ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள மற்ற கட்சிகளை அதன் பொதுச் சபைக்கு அழைப்பது குறித்து முடிவு செய்யும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் அஹ்மத் மஸ்லான் தெரிவித்தார்.

கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், “வியாழன் கூட்டத்தின் முடிவுக்காக காத்திருங்கள்” என்று கூறினார். அம்னோ தனது பொதுப்பேரவை ஜனவரி 11 முதல் 14 வரை நடத்தவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை, பிகேஆர் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி, அம்னோ பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்வதா இல்லையா என்பது குறித்து கட்சி கூட்டு முடிவெடுக்கும் என்றார்.

முன்பு அரசியல் போட்டியாளர்களாக இருந்த அம்னோ மற்றும் பிகேஆர் இப்போது அன்வார் இப்ராஹிமின் ஒற்றுமை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றன. அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி துணைப் பிரதமராக உள்ளார். அம்னோ பொதுச் சபையில் தலைவரின் கொள்கை உரையை பிரதிநிதிகள் விவாதிப்பார்கள் என்றும், நேரமின்மை காரணமாக வேறு எந்த பிரேரணைகளும் முன்வைக்கப்படாது என்றும் அஹ்மட் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here