புத்ராஜெயா:
உலக சந்தையில் செம்பனை எண்ணெய்யின் சராசரி விலை கடந்த ஆண்டு டிசம்பரில் அதிகரித்துள்ள போதிலும், ஒரு கிலோ முதல் ஐந்து கிலோ வரையிலான போத்தலில் அடைக்கப்பட்ட சுத்தமான சமையல் எண்ணெயின் விலை, ஜனவரி 8 முதல் பிப்ரவரி 7 வரை மாறாது அதே விலையில் தொடர்ந்து பராமரிக்கப்படும் என்று, உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் (KPDN), டத்தோஸ்ரீ சலாவுடின் அயூப் கூறினார்.
போத்தலில் அடைக்கப்பட்ட ஒரு கிலோ சமையல் எண்ணெய்யின் விலை RM6.90 காசாகவும் , இரண்டு கிலோ RM13.30 காசாகவும், மூன்று கிலோ RM19.60 காசாகவும் மற்றும் ஐந்து கிலோ RM30.90 காசு என்ற விலையில் மாறாது பேணப்படும் என்று அவர் கூறினார்.
மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்க உதவும் கூட்டு முயற்சியாக, சமையல் எண்ணெய் தொழில்துறையினரின் ஒத்துழைப்பின் பேரில், இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்