எருமை மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பதின்ம வயது வாலிபர் பலி

செப்பாங்:

ஜாலான் டெங்கில் ஆயிர் ஈத்தாமில், இன்று அதிகாலை மோட்டார் சைக்கிள் எருமை மாடு மீது மோதியதில் பதின்ம வயது வாலிபர் ஒருவர் உயிரிழந்தார்.

1.30 மணியளவில் நடந்த சம்பவத்தில், 16 வயது மாணவன் தலையில் காயம் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக செப்பாங் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் வான் கமருல் அஸ்ரான் வான் யூசோப் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட நபர் டெங்கிலில் இருந்து தாமான் டெங்கில் ஜெயாவில் உள்ள தனது வீட்டிற்கு தனியாக சவாரி செய்து கொண்டிருந்தபோது, எருமை ஒன்று திடீரென சாலையைக் கடந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், அதனால் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக துணை மருத்துவர்களால் உறுதிப்படுத்தப்பட்டது,” என்று, அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.

இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக புத்ராஜெயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது என்றும் சாலை போக்குவரத்து சட்டம் 1987ன் பிரிவு 41(1)ன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here