கடந்த மாதம் இரண்டு மாணவிகளை (கைப்பந்து வீராங்கனைகள்) அறைந்தா சர்ச்சைக்குரிய கைப்பந்து பயிற்சியாளரின் பயிற்சியாளர் உரிமத்தை மலேசிய கைப்பந்து சங்கம் ரத்து செய்துள்ளது.
அவர் இனி பயிற்றுநராக செயல்பட முடியாது என்றும் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சியளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் உடன் இணைந்து நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில், இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோஹ் இதனை அறிவித்தார்.