ஈப்போ: தெலுக் இந்தான் ஊத்தாங் மெலிந்தாங்கில் உள்ள ஒரு மீனவ கிராமத்தில் திங்கள்கிழமை (ஜன 16) ஏற்பட்ட தீ விபத்தில் 6 வீடுகள் தீப்பிடித்து எரிந்ததில் முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார்.
பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஜாலான் பகான் ஈக்கானில் உள்ள வீடுகளில் தீ விபத்து குறித்து காலை 6.42 மணிக்கு தங்களுக்கு பேரிடர் அழைப்பு வந்தது.
80 வயதான நபர் ஒரு வீட்டின் இரண்டாவது அறையில் காணப்பட்டதாகவும், மேலும் 24 வயதுடைய நபர் தீயில் இருந்து தப்பிக்க முயன்றபோது முழங்காலில் காயம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். தீயினால் இரண்டு கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளதாக அவர் கூறினார்.