பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அமைச்சர்களின் சொத்து அறிவிப்புகள் வெறும் அரசியல் வித்தையாக இல்லாமல் பொறுப்பாகவும் வெளிப்படையாகவும் செய்யப்பட வேண்டும் என்றார். நிதி அமைச்சராகவும் இருக்கும் அன்வார், சொத்து அறிவிப்பு செயல்முறைகளை மிகவும் வெளிப்படையானதாக மாற்ற மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (MACC) உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் விவாதித்து வருவதாகக் கூறினார்.
என்னைப் பொறுத்த வரையில் சொத்துக்கள் பற்றிய அறிவிப்பு கடந்த காலத்தில் ஒரு கேலிக்கூத்தாக இருந்தது. நூற்றுக்கணக்கான மில்லியன் ரிங்கிட் வைத்திருப்பவர்களையும் இன்னும் RM11 மில்லியன் அல்லது RM12 மில்லியனையும் அறிவிக்கும் நபர்களை நீங்கள் காணலாம். எனவே அவ்வாறானவர்களின் சொத்துகள் தெளிவாக இருப்பதை உறுதி செய்வதே நாம் செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
‘Developing a Madani Nation’ எனும் தொனிப்பொருளில் இன்று இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட கலந்துரையாடலுக்கு பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, தனது அமைச்சரவை அமைச்சர்கள் தமது சொத்துக்களை தமக்கு அறிவித்துள்ளார்களா என வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது அதிர்ச்சியளிக்கிறது என்று கூறிய அன்வார், சில அறிவிப்புகள் புள்ளிவிவரங்கள் மற்றும் கோப்புகளைப் பார்த்த பிறகு குறிப்பிட்ட நபரின் உண்மையான செல்வத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று கூறினார்.
இலக்கு வைக்கப்பட்ட மானியங்களின் நிலை குறித்து, குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினருக்கும், விவசாயத் துறை மற்றும் சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மின் கட்டணங்கள் போன்ற பின்தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அன்வார் கூறினார்.
இலக்கு மானியங்கள் மீது நடவடிக்கைகள் உள்ளன. முந்தைய அரசு (கட்டண உயர்வு) அறிவித்திருந்தாலும், திட்டத்தை ரத்து செய்துவிட்டு, புதிய அணுகுமுறையை எடுத்துள்ளோம். கசிவுகள் குறித்த ஆடிட்டர் ஜெனரலின் அறிக்கையை நாங்கள் தீவிரமாகப் பார்க்கிறோம் மற்றும் தீர்வுகளைக் கண்டறிவதற்காக பிரச்சனைகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம் என்று அவர் மேலும் கூறினார்.