கோலாலம்பூர்: செவ்வாய்கிழமை (ஜனவரி 24) காலை ஏற்பட்ட தீ விபத்தில் பங்சரில் உள்ள கடைவீடு ஒன்று சேதமடைந்தது. செவ்வாய்கிழமை ஒரு அறிக்கையில், நகர தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, காலை 10.10 மணிக்கு அழைப்பு வந்ததையடுத்து, ஜாலான் மரோப்பில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகக் கூறியது.
இந்த தீ விபத்தில் ஒரு மாடி கடை வீட்டின் 30% எரிந்து நாசமானது. யாரும் இந்த தீ விபத்தில் பாதிப்படையவில்லை. தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது என்று அது கூறியது.