மோசமடையும் ஜோகூர் வெள்ள நிலவரம் : 4,368 பேர் பாதிப்பு

ஜோகூரில் இன்று புதன்கிழமை (ஜனவரி 25) மாலை 4 மணி நிலவரப்படி, 1,218 குடும்பங்களைச் சேர்ந்த 4,368 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, அங்குள்ள நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை நண்பகலில் 1,104 குடும்பங்களைச் சேர்ந்த 3,967 பேராக இருந்தது.

ஜோகூரின் ஆறு மாவட்டங்கள் வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. அதாவது சிகாமாட், மெர்சிங், கோத்தா திங்கி, குளுவாங், பத்து பகாட் மற்றும் மூவார் ஆகிய மாவட்டங்களில் 44 தற்காலிக நிவாரண மையங்கள் செயல்பட்டு வருவதாக மாநில பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here