இன்று அதிகாலை ரந்தாவ் கிரானில் உள்ள நீண்ட வீட்டுத்தொகுதியில் ஏற்பட்ட தீப்பரவலில் அவர்களின் வீடுகள் எரிந்து நாசமானதால், மொத்தம் 39 குடும்பங்கள் தங்கள் தங்குமிடத்தை இழந்தன என்று சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் காலை 6.48 மணிக்கு தங்களுக்கு அழைப்பு வந்ததாகவும், அதனைத் தொடர்ந்து லிம்பாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய உறுப்பினர்களின் குழு, நங்கா மெண்டாமிட் தன்னார்வ தீயணைப்புக் குழுவின் உதவியுடன்குறித்த இருப்பிடத்திற்கு விரைந்தனர் என்று சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுக் குழு செய்தித் தொடர்பாளர் கூறினார்.
“சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர், தீ கொழுந்துவிட்டு எரிவதையும், இரண்டு மாடிகள் கொண்ட நீண்ட வீதுகளின் 80 விழுக்காடு எரிந்து அழித்துவிட்டதையும் கண்டறிந்தனர் என்றும் இந்த தீ விபத்தில் காயங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தீ விபத்துக்கான காரணம் மற்றும் மதிப்பிடப்பட்ட இழப்பு இன்னும் விசாரணையில் உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.