ஈப்போ: பேராக் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா துறை (பெர்ஹிலிடன்) ஜெரிக் மற்றும் ஜெலியை இணைக்கும் கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள், யானைகள் அப்பகுதியில் இருப்பதால் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
அதன் இயக்குனர் யூசப் ஷெரீப் கூறுகையில், ஜெரிக்கில் பலநோக்கு வாகனத்தை யானை ஒன்று பின்தொடர்ந்து செல்வது போன்ற வீடியோ பதிவு சமீபத்தில் வைரலானது.
அப்பகுதியில் யானைகள் இருப்பது ஒரு பொதுவான நிகழ்வு மற்றும் சாலையைப் பயன்படுத்துபவர்கள் அதனை எதிர்கொள்ள வேண்டாம். மாறாக விலங்குகளிடமிருந்து தங்கள் வாகனத்தை தற்காத்து ஓட்ட முயற்சிக்க வேண்டும். அத்தகைய சூழ்நிலையில் பின்வாங்குவது நல்லது.
பெர்ஹிலிடன் பல எச்சரிக்கை பலகைகளை நிறுவியுள்ளதால், பாதையில் யானைகளை சந்திக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து சாலைப் பயனர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பெர்னாமாவை நேற்று இங்கு தொடர்பு கொண்டபோது கூறினார்.
இந்த இடம் வனவிலங்குகளின் வாழ்விடமாகவும், யானைகள் நடப்பதற்கும் மனிதர்கள் மற்றும் வாகனங்கள் பயன்படுத்தப்படும் இடமாகவும் இருக்கிறது என்றார்.