கோத்தா கினா பாலுவில் நேற்று நடந்த ஒரு சம்பவத்தில், ஒலி பெருக்கிக்குள் சிக்கிக்கொண்ட சிறுமியின் கை, தீயணைப்பு வீரர்களால் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது.
ஒலிபெருக்கி உள்ளே என்ன இருக்கிறது என்று ஆர்வமாக கையை விட்டுப் பார்த்த போது, சிறுமியின் கை மாட்டிக் கொண்டதாக, அவரின் தாயாரிடமிருந்து
சபா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு அழைப்பு வந்ததாக சபா மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை இயக்குநர் மிஸ்ரான் பிசாரா கூறினார்.
குறித்த சம்பவம் தொடர்பில், நேற்று (ஜனவரி 31) பிற்பகல் 3.41 மணியளவில் தகவல் கிடைத்ததாகவும், தீயணைப்பு வீரர்கள் உடனே சம்பவ இடத்திற்கு வந்து சிறப்பு கருவிகளைப் பயன்படுத்தி, சிறுமியின் கையை வெளியே எடுத்ததாகவும் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறினார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகும் அந்த ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடியதாக இருந்தது தெரிய வந்தது என்றும் அவர் மேலும் கூறினார்.