கெடாவின் Relau வில் திடீர் வெள்ளம்

நேற்று பிற்பகல் 3 மணி முதல் இரண்டு மணிநேரம் பெய்த கனமழையைத் தொடர்ந்து, கெடா, பண்டார் பாருவில் உள்ள Relau வில் வெள்ளம் ஏற்பட்டதை தொடர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமீபத்திய மாநிலமாக கெடா உள்ளது.

பண்டார் பாரு மாவட்ட குடிமைத் தற்காப்புப் படை அதிகாரி, லெப்டினன்ட் (PA) அப்துல் ரஹீம் கைருடின் கூறுகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் PPS Sekolah Kebangsaan, Relau வில் திறக்கப்பட்ட நிவாரண மையத்தில் தங்கவைக்கப்பட்டனர் என்றார்.

“கனமழை காரணமாக Relau வில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஆற்றின் நீர் மட்டத்தை கண்காணிக்க பல ஏபிஎம் பணியாளர்கள் நிறுத்தப்பட்டனர் மற்றும் முக்கிம் ரெலாவ்வில் பல சாலைகள் துண்டிக்கப்பட்டிருப்பதையும் கண்டறிந்ததாக , ”அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here