ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் அல்மர்ஹூம் சுல்தான் இஸ்கந்தர் இன்று புத்ராஜெயாவின் ஶ்ரீ பெர்டானாவில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் சந்திப்பு நடத்தினார்.
சுல்தான் இப்ராஹிமின் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தின்படி, 10ஆவது பிரதமரின் அழைப்பை நிறைவேற்றுவதற்காக இந்த சந்திப்பு நடத்தப்பட்டது. அன்வார் கடந்த திங்கட்கிழமை (ஜனவரி 30) சிங்கப்பூருக்கான தனது பணிப் பயணத்தைப் பற்றி மாட்சிமைக்கு விளக்கினார். சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் மற்றும் அவரது பிரதமர் லீ சியென் லூங்கை பயணத்தின் போது அன்வார் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.