இன்று காலை 8 மணி நிலவரப்படி ஜோகூரில் 163 பேர் நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்

ஜோகூரில் வெள்ளம் காரணமாக, தமது வாழ்விடங்களிலிருந்து வெளியேறி நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை, இன்று செவ்வாய்க்கிழமை (பிப். 7) காலை 8 மணி நிலவரப்படி, 163 பேராக உள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது.

பத்து பகாட், சிகாமாட் மற்றும் மெர்சிங் ஆகிய இடங்களில் இயங்கிவரும் நிவாரண மையங்களில் அனைவரும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அது இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சிகாமாட், குளுவாங், மெர்சிங் மற்றும் கோத்தா திங்கி ஆகிய இடங்களில் தொடர்ந்து மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு நினைவூட்டப்படுவதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here