முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் அடுத்த வாரம் வானொலி அறிவிப்பாளராக தனது புதிய வாழ்க்கையைத் தொடங்குவார் என்று பெரித்தா ஹரியான் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் அம்னோவில் இருந்து நீக்கப்பட்ட கைரி, HotFM இன் “Bekpes Hot” குழுவில் அதன் மூன்று அறிவிப்பாளர்களான ஜோஹன், ஏஜி மற்றும் ஏசி மிசல் ஆகியோருடன் இணைவார்.
“Bekpes Hot” குழு திங்கள் முதல் வெள்ளி வரை காலை 6 மணி முதல் 10 மணி வரை ஒளிபரப்பப்படுகிறது. அறிக்கையின்படி, மீடியா ப்ரைமா ஆடியோ (MPA) கைரியின் நியமனத்தை உறுதி செய்துள்ளது. MPA இன் தலைமைச் செயல் அதிகாரி நஸ்ரி நோரன் கூறுகையில், முன்னாள் ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினரான கைரி சாதாரண அரசியல்வாதி அல்ல, அவருக்குப் பெரும் ஆதரவாளர்கள் உள்ளனர். அவர் கேட்போருக்கு வித்தியாசமான நிகழ்ச்சி தொகுப்பினை வழங்குவார்.
முன்னதாக, ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம், கைரி அம்னோவில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜோகூரில் புதிய பாத்திரங்களில் அடியெடுத்து வைக்கலாம் என்று சூசகமாகத் தெரிவித்தார். எதிர்கால JDTFC CEO மற்றும் ஜோகூர் இளைஞர் ஆலோசகர் என்ற தலைப்பில் கைரியுடன் இருக்கும் பழைய படத்தை அவர் பதிவிட்டுள்ளார்.
15ஆவது பொதுத் தேர்தலில் கட்சியின் ஒழுக்கத்தை மீறியதற்காக கைரி அம்னோவால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.









