ஜோகூர், சிகாமாட்டில் இயங்கி வந்த கடைசி நிவாரண மையம் மூடப்பட்டது

ஜோகூரின் சிகாமாட் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்த கடைசி தற்காலிக நிவாரண மையம் இன்று வெள்ளிக்கிழமை (பிப். 10) நண்பகல் 2 மணிக்கு மூடப்பட்டது. அங்கு தங்கியிருந்த அனைவரும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்தைத் தொடர்ந்து, குறித்த நிவாரண மையம் மூடப்பட்ட்தாக
மாநில பேரிடர் மேலாண்மை குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பெக்கோக், பத்து பஹாட்டில் உள்ள சுங்கை பத்து பஹாட்டின் நீர்மட்டம் ஏற்கனவே அபாய அளவான 18.7 மீட்டரைத் தாண்டிவிட்டதாகவும், தற்போது 18.72 மீட்டராக இருப்பதாகவும் அது குறிப்பிட்டது.

மேலும் கூலாயில் உள்ள ஜாலான் சுங்கை திராம்-உலு தெப்ராவ் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அந்தச்சாலை அனைத்து வாகனங்களும் இன்னும் மூடப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here