மருத்துவமனை வார்டில் 12 வயது சிறுமியை உடல்ரீதியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் மருத்துவர் கைது

கெமாமன் மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில், 12 வயது சிறுமி நோயாளியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறி, அம் மருத்துவமனையின் மருத்துவர் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், 30 வயதுடைய மருத்துவர் நண்பகல் 1.50 மணியளவில் கைது செய்யப்பட்டதாக திரெங்கானு காவல்துறைத் தலைவர், டத்தோ ரோஹைமி முகமட் இசா தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் கூற்றுப்படி, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் தனது ஆடையை நீங்கி அந்தரங்க உறுப்பைத் தொட்டார் என்றும், அவரது கைபேசியைப் பயன்படுத்தி புகைப்படம் எடுத்தார் என்றும் கூறியதாக, ரோஹைமை இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

விசாரணையைக்காக சந்தேக நபரின் தொலைபேசியையும் பொலீசார் கைப்பற்றியுள்ளதாக ரோஹைமி கூறினார்.

உடல் ரீதியான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான குழந்தைகள் மீதான பாலியல் குற்றச் சட்டத்தின் 14 (a) பிரிவின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here