செலாயாங் மருத்துவமனையில் நோயாளியை கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டதை போலீசார் உறுதிப்படுத்தினர்

’கோம்பாக்: செவ்வாய்கிழமை (பிப் 14) செலாயாங் மருத்துவமனையில் நோயாளி ஒருவரை கத்தியால் குத்திய சந்தேக நபர் அங்கு பிடிபட்டதை  போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். புதன்கிழமை (பிப். 15) ஒரு அறிக்கையில், சந்தேக நபர் தற்போது மருத்துவமனையின் மனநலப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சிலாங்கூர் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

22 வயதான சந்தேக நபர் கத்தியால் இடுப்பை குத்தியபோது, ​​29 வயதான பாதிக்கப்பட்ட நபர் தரையில் அமர்ந்திருப்பதை சாட்சிகள் பார்த்தனர். ஆயுதத்தால் கடுமையான காயத்தை ஏற்படுத்தியதற்காக தண்டனைச் சட்டம் பிரிவு 326இன் கீழ் விசாரணைகள் நடத்தப்படுகின்றன என்று  சிலாங்கூர் காவல்துறையின் தற்காலிக தலைவர் டத்தோ எஸ். சசிகலா தேவி கூறினார். தாக்குதலுக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது.

இதற்கு முன், சிலாங்கூர் சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் ஷாரி ங்காடிமான், பாதிக்கப்பட்டவர் சுயநினைவு அடைந்துவிட்டதாகவும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு நிலையான நிலையில் இருப்பதாகவும் கூறினார். புதன்கிழமை ஒரு அறிக்கையில், பாதிக்கப்பட்டவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்று ஷாரி கூறினார்.

நோயாளி தற்போது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here