மோட்டார் சைக்கிள் மற்றும் காரை உட்படுத்திய விபத்தில் கணவன் மனைவி பலி

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 296.9 ஆவது கிலோமீட்டரில் நேற்று முன்தினம் நடந்த சாலை விபத்தில், கணவன்-மனைவி உயிரிழந்தனர்.

மாலை 6.15 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், பலத்த காயம் அடைந்த முஹமட் ரிசால் ஓத்மான் (48) மற்றும் அவரது மனைவி அசுரா அப்துல்லா (48) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக, கம்பார் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் முகமட் நஸ்ரி தாவூட் கூறினார்.

கணவன், மனைவி பயணித்த BMW R1200 GS அட்வென்ச்சர் மோட்டார் சைக்கிளும், 25 வயதுப் பெண் ஓட்டிச் சென்ற பெரோடுவா பெஸ்ஸா காரும் மோதி, விபத்துக்குள்ளானது.

பாதிக்கப்பட்டவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, வலது பாதையில் கார் மீது மோதியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

“சம்பந்தப்பட்ட வாகனங்கள் ஆய்வுக்காக புஸ்பாகம் அனுப்பப்பட்டுள்ளது. சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 41(1)ன் படி, மேலதிக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here