கடந்த வியாழன் அன்று, கெப்போங்கின் மூன்று குடியிருப்புப் பகுதிகளில், கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் (DBKL) மேற்கொண்ட நடவடிக்கையில், வெளிநாட்டினரால் அனுமதியின்றி நடத்தப்பட்ட 7 வணிக வளாகங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை தாமான் புசாட் கெப்போங், தாமான் ஜிஞ்சாங் பாரு மற்றும் தாமான் செராஸ் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டதாக, DBKL இன் அதிகாரப்பூர்வ பேஸ்புக்கில் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது








