நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்ற இரு சகோதரர்கள் நீரில் மூழ்கி மரணம்

கூலிம் அருகே உள்ள சுங்கை செடிம் நீர்வீழ்ச்சியில் இரண்டு சகோதரர்கள் நீரில் மூழ்கி இறந்தனர். கூலிம் மாவட்ட காவல்துறைத் தலைவர்  முகமட் ரெட்சுவான் சலே, சம்பவத்திற்கு முன்னர், பாதிக்கப்பட்ட முகமது சியாஸ்வான் யூசோப் 25, மற்றும் அவரது சகோதரர் முகமது சயாபிக் 33, ஆகியோர் மாலை 3.20 மணியளவில் நீர்வீழ்ச்சியில் மூன்று நண்பர்களுடன் நீந்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அவர்கள் நீராடும்போது சுழலில் சிக்கியதாக தெரியவந்துள்ளது என்றார். அவர்களில் முகமது சியாஸ்வானைத் தவிர, நான்கு பேர் பாதுகாப்பாக தப்பிக்க முடிந்தது. அவர் நீரில் மூழ்கிவிட்டார் என்று அஞ்சப்பட்டது.

முகமது சயாபிக் தனது சகோதரனைக் காப்பாற்ற மீண்டும் தண்ணீரில் குதித்தார். இருப்பினும், இருவரும் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்பட்டது என்று அவர்  ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் கிராம மக்கள் உதவியதாகவும், பினாங்கின் தாசேக் கெலுகோரில் இருந்து பலியான இருவரின் உடல்கள் மாலை 3.55 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் முகமட் ரெட்சுவான் கூறினார்.

பாதிக்கப்பட்ட இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கூலிம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. மேலும் வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டது என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here