கார் வெள்ளத்தில் மூழ்கியதில் முதியவர் இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார்

குவாந்தானில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளம் வடிந்ததை அடுத்து, ரோம்பின் ஃபெல்டா செலான்கார் 2 இன் பிரதான சாலையில் உள்ள செம்பனைத் தோட்டத்தில் மூழ்கிக் கிடந்த காரில், முதியவர் ஒருவர் இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார்.

பாதிக்கப்பட்ட அப்துல்லா சதார், 73, நேற்று (மார்ச் 2) மாலை 6.40 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்று, ரோம்பின் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முகமட் அஸாஹரி முக்தார் கூறினார்.

“முதற்கட்ட விசாரணைகளின்படி, பாதிக்கப்பட்டவர் கடந்த புதன் கிழமை வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் காணமல் போனதாகவும், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், அவரைப் பல இடங்களில் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் குடும்பத்தினர் கூறினர்.

“பாதிக்கப்பட்டவரின் மகன் கூறுகையில், தந்து நண்பர் தன்னைத் தொடர்பு கொண்டு, பாதிக்கப்பட்டவரின் கார், புரோத்தோன் ஈஸ்வரா கார் செம்பனைத் தோட்டத்தில் காணப்பட்டதாகவும், இறந்தவர் காரில் இருப்பதாகவும் தெரிவித்தார்,” என்றார்.

பின்னர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஃபெல்டா குடியிருப்பாளர்களுடன் காவல்துறை பாதிக்கப்பட்டவரை மீட்டெடுத்ததாக முகமட் அஸாஹரி கூறினார்.

நேற்றிரவு ரோம்பினில் உள்ள முவாத்ஸாம் ஷா மருத்துவமனையில் நடந்த பிரேதப் பரிசோதனையில், பாதிக்கப்பட்ட முதியவர் நீரில் மூழ்கி இறந்தது உறுதிப்படுத்தப்பட்டது என்றும் இவ்வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டது என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here