நெகிரி செம்பிலானில் வெள்ள நிலைமை சீரடைந்தது; அங்கு இயங்கிவந்த அனைத்து துயர் துடைப்பு மையங்களும் மூடப்பட்டன

நெகிரி செம்பிலானில் வெள்ள நிலைமை சீரடைந்ததைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 1 முதல் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடமளிக்கும் வகையில் திறக்கப்பட்ட அனைத்து தற்காலிக நிவாரண மையங்களும் மூடப்பட்டுள்ளதாக, நெகிரி செம்பிலானின் மலேசிய குடிமைத் தற்காப்புப் படைதெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் அதிக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடமளிக்கும் வகையில் சுங்கை கெலமா தேசியப் பள்ளியில் இயங்கிவந்த துயர் துடைப்பு மையம் இன்று பிற்பகல் 2.07 மணிக்கு முற்றிலும் மூடப்பட்டதாக அது தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக, நெகிரி செம்பிலானில் 312 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1,097 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here