ஜோகூர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹபீஸ் காசி தெரிவித்துள்ளார்.
சிறப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க மாவட்ட அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு கூட்டம் நேற்றிரவு நடத்தப்பட்டது, இந்த சந்திப்பின் போது முக்கியமான பகுதிகளில் நாடைபெறும் சிறப்பு செயல்பாடுகள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து உதவுவதற்கான பல விஷயங்கள் பற்றி ஆராய்ந்து முடிவு செய்யப்பட்டன” என்று நேற்று இரவு வெளியிட்டிருந்த ஒரு பேஸ்புக் பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஜோகூர் மாநில வெள்ளச் செயற்பாட்டு அறையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநில துணைச் செயலாளர் (மேலாண்மை) டத்தோ நோ இப்ராஹிம், துணை மாநிலச் செயலாளர் (விளையாட்டு, இளைஞர் மற்றும் தன்னார்வத் தொண்டு) டத்தோ ஆன் ஜாபர் @ ஜாபர் மற்றும் மாவட்ட அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மலேசிய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள தொடர் மழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுள் இருப்பதாகவும், அவற்றை சமாளிக்க முறையான ஏற்பாடுகள் மற்றும் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டுள்ளதாக ஒன் ஹபீஸ் கூறினார்.