கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின், தனக்கும் பெர்சத்துவுக்கும் எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) விதித்துள்ள அரசியல் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கம் உட்பட விதித்துள்ள கட்டுப்பாடுகளை எதிர்த்து நீதித்துறை மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
பெர்சத்து தலைவரான அவர் மீது விதிக்கப்பட்ட பயணத் தடையை ரத்து செய்ய நீதிமன்ற உத்தரவை நாடுகிறார். இது “தவறானது” மற்றும் “அடிப்படையற்றது” என்று அவர் கூறினார். நேற்று Messrs Chetan Jethwani & Company மூலம் விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது.