சபா முதல்வர் டத்தோஸ்ரீ ஹாஜி நூருக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக, பத்து சாப்பி மசீச பிரிவுத் தலைவர் டத்தோ செவ் கோக் வோ மசீசவில் இருந்து விலகினார்.
“கட்சிக்கு உதவுவதற்காக ககாசான் ராக்யாட்டில் சேர தயாராக இருக்கிறேன் என்றும், அதன் காரணமாகவே மசீசவை விட்டு வெளியேற இந்த முடிவை எடுத்தேன், ,” என்று அவர் இன்று சனிக்கிழமை (மார்ச் 11) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
ஐந்து கட்சிகள் கொண்ட சபா மாநில கூட்டணி கட்சியான கபுங்கான் ராக்யாட் சபா (GRS)வில் ஒன்றான, ஆளும் கட்சியான முதல்வர் ஹாஜிஜியின் பார்ட்டி ககாசன் ராக்யாட் சபாவில் (ககாசான் ரக்யாட்) சேருவதற்காக மசீச மத்திய குழு உறுப்பினர் பதவி மற்றும் பத்து சாப்பி பிரிவுத் தலைவர் உட்பட தனது அனைத்து பதவிகளையும் துறப்பதாக செவ் கூறினார்.