திருட்டு மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இரு பெண்கள் கைது

அம்பாங் ஜெயாவிலுள்ள உகே பெர்டானா பகுதியில் நேற்று, திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்றிரவு 10.30 மணியளவில், காசாளர் மற்றும் விற்பனையாளராக பணிபுரியும் 18 மற்றும் 19 வயதுடைய இரு பெண்களும் குறித்த கறுப்பு நிற Demak Evo Z வகை மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமான முறையில் சென்றபோது, கைது செய்யப்பட்டதாக அம்பாங் மாவட்ட காவல்துறைத் தலைவர், முகமட் ஃபாரூக் எஷாக் கூறினார்.

தாமான் மெலாவதி காவல் நிலைய உறுப்பினர்கள் குழு, உகே பெர்டானா பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனையில், குறித்த இரு பெண்களும் கைது செய்யப்பட்டனர் என்று அவர் கூறினார்.

சந்தேக நபர்களுக்கு முந்தைய குற்றப் பதிவுகள் எதுவுமில்லை. ஆனால் சந்தேக நபர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதாக சவ் கிட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது என்று அவர் கூறினார்.

குற்றவியல் சட்டத்தின் 379A பிரிவின்படி, மேல் நடவடிக்கைக்காக இரு சந்தேக நபர்களும் வழக்குப் பொருட்களும் தாமான் மெலாவதி காவல் நிலையத்திற்கு வரப்பட்டதாக முகமட் ஃபாரூக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here