கடந்தாண்டு மலேசியாவிற்கு 10 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். இதன் மூலமாக RM28.2 பில்லியன் வருவாயை ஈட்டியுள்ளதாக நாடாளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு மலேசியா மொத்தம் 9.2 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலக்காக கொண்டிருந்தது. ஆனால் அந்த எண்ணிக்கை 10 மில்லியனாக அதிகரித்துள்ளது TRF 2.0 திட்டத்தின் மிகப்பெரிய அடைவு என்று, அமைச்சகத்திற்கான ஒதுக்கீடு மசோதா 2023 க்கான குழு அளவிலான விவாதத்தின் போது, சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார துணை அமைச்சர் கைருல் ஃபிர்தௌஸ் அக்பர் கான் கூறினார்.
இந்த வருட சுற்றுலாத்துறைக்கான பரிந்துரைக்கப்பட்ட ஒதுக்கீட்டில் மேலும் சுற்றுலா பயணிகளைக் கவருவதற்கான பல ஆக்கபூர்வமான திட்டங்கள் உள்ளன என்றும் , இது முந்தைய ஆண்டை விட அதிக தாக்கத்தை உருவாக்கும் என்று நம்புவதாக அவர் மேலும் கூறினார்.