இன்று காலை 9.15 மணியளவில் புட்டான், ஜாலான் இம்பான் சைலன் அருகே ஆற்றில் மூழ்கி காணாமல் போன ஆடவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.
ஆற்றில் தவறி விழுந்த காரிலிருந்து தனது மகனைக் காப்பாற்ற குறித்த நபர் முயன்றதாக நம்பப்படுகிறது, இருப்பினும், பாதிக்கப்பட்டவரின் மகன் பொதுமக்களால் காப்பாற்றப்பட்டார். ஆனால் பாதிக்கப்பட்ட லசிபி லவாடிஹு (40) என்பவர், நேற்று மாலை 5.53 மணியளவில் நீருக்குள் காணாமல் போனதாகவும், அவரது உடல் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட இடத்திலிருந்து 300 மீட்டர் தொலைவில் மலேசிய தேசிய போலீஸ் படையின் ட்ரோன் யூனிட் (PDRM) மூலம் பாதிக்கப்பட்டவர் கண்டுபிடிக்கப்பட்டதாக பெனாம்பாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் பதில் தலைவர், ரோனி சிகாவன் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவரின் உடல் மேலதிக நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், மீட்பு நடவடிக்கை காலை 9.30 மணியளவில் முடிவடைந்தது என்றார்.
தொடர்பான வேறு செய்திகள்:
https://makkalosai.com.my/2023/03/27/திடீரென-ஆற்றில்-கவிழ்ந்த/