சிலாங்கூரில் நடத்தவிருந்த ‘நோன்பு துறப்பிற்கு’ அனுமதி மறுக்கப்பட்டதாக கெடா MB குற்றச்சாட்டு

சனுசி

சிலாங்கூர் செர்டாங்கில் தான் ஏற்பாடு செய்யவிருந்த நோன்பு துறப்பு அல்லது “buka puasa” நிகழ்ச்சியை அரசாங்கம் அனுமதிக்கவில்லை என்று கெடா மந்திரி பெசார் சானுசி நோர் கூறுகிறார். மத்திய அரசின் நிகழ்வுகளில் கலந்து கொள்வதில் இருந்து தனக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நேற்று கூறிய பிறகு, ஏப்ரல் 9 ஆம் தேதி மலேசியா அக்ரோ எக்ஸ்போசிஷன் பார்க் செர்டாங்கில் (MAEPS) நடந்த “buka puasa” நிகழ்ச்சிக்கான ஒப்புதலை விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சகம் திரும்பப் பெற்றதாக சனுசி கூறுகிறார்.

நாங்கள் ஒரு ‘buka puasa’ நிகழ்வை மட்டுமே நடத்த விரும்பினோம். இந்த மண்டபத்தை வாடகைக்குக் கூட கெடா அரசாங்கம் செலுத்தும் என்று அவர் இன்று ஒரு முகநூல் பதிவில் கூறியுள்ளார். நிகழ்ச்சி திட்டமிட்டப்படி தொடரும் ஆனால் அதற்கு பதிலாக கோலாலம்பூரில் நடைபெறும் என்று சனுசி கூறினார்.

மே மாதம் லங்காவி சர்வதேச கடல் மற்றும் விண்வெளி கண்காட்சி (LIMA) உட்பட மத்திய அரசு ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டதாக  அவர் கூறியிருந்தார். பிரதமர் அன்வார் இப்ராஹிமின் அமைச்சரவையால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவர் கூறினார். இருப்பினும் அவர் விரிவாகக் கூறவில்லை.

சனுசியின் கூற்றுக்கு கருத்து தெரிவிக்கும் கோரிக்கைகளுக்கு பிரதமர் துறை அலுவலகம் பதிலளிக்காத நிலையில், தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில், பாஸ் தலைவர் என்ன சொன்னார் என்று தெரியவில்லை என்று கூறினார். மக்களுக்கு சேவை செய்ய அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்ற ஒற்றுமை அரசாங்கம் தயாராக உள்ளது என்று ஃபஹ்மி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here