அந்நியத் தொழிலாளர் மறுசீரமைப்பு திட்டத்தில் (RTK) பதிவதாக கூறி RM63,000 ஏமாற்றியதாக முதியவர் மீது குற்றச்சாட்டு

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அந்நியத் தொழிலாளர் மறுசீரமைப்பு திட்டத்தில் (RTK) வெளிநாட்டு தொழிலாளரை வேலைக்கு அமர்த்துவதற்கான பதிவுகளை மேற்கொள்வதாகக் கூறி, ஒரு நபரிடம் RM63,000 ஏமாற்றியதாக, ஒரு வேலை ஓய்வு பெற்ற முதியவர் மீது, இன்று சிரம்பான் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

எவ்வாறாயினும், முஹமட் லோகன் அப்துல்லா, 68, என்பவருக்கு எதிரான குற்றச்சாட்டு, மாவட்ட நீதிமன்ற நீதிபதி முகமட் பிர்தௌஸ் சாலே முன்நிலையில் வாசிக்கப்பட்ட பின்னர், அவர் தான் குற்றமற்றவர் என்று கூறி, விசாரணை கோரினார்.

குற்றப்பத்திரிகையின்படி, RTK திட்டத்தின் கீழ் வெளிநாட்டினரைப் பதிவு செய்யும் முகமாக முகமட் லோகன் என்பவர் எஸ். செல்வதுரை என்பவரிடம் RM63,000 தொகையை செலுத்துமாறு கூறி, ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.

மார்ச் மற்றும் செப்டம்பர் 25, 2021 க்கு இடையில் கிரீன் ஸ்ட்ரீட் ஹோம்ஸில் இந்த குற்றம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

முகமட் லோகன் அப்துல்லாவிற்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் 417வது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு தனி நபர் உத்தரவாதத்துடன் RM2,000 ஜாமீனில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது, அத்தோடு வழக்கின் அடுத்த செவிமடுப்பு மே 16-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here