SRC வழக்கின் தீர்ப்பை மறுஆய்வு செய்வதற்கான முயற்சியில் நஜிப் தோல்வி

SRC இன்டர்நேஷனல் வழக்கின் தீர்ப்பை மறுஆய்வு செய்ய அனுமதி கோரிய டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் விண்ணப்பத்தை இன்று 4-1 என்ற பெரும்பான்மையில் கூட்டரசு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நீதிபதி வெர்னான் ஓங் லாம் கியாட் அவர்களால் வாசிக்கப்பட்ட இந்தப் பெரும்பான்மைத் தீர்ப்பில், எந்த ஒரு பக்கச் சார்பையோ அல்லது இயற்கை நீதியை மீறுவதையோ நீதிபதிகள் குழு கண்டறியவில்லை என்று கூறி, அவரது மறுஆய்வு விண்ணப்பத்தை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்தது.

SRC இன்டர்நேஷனல் வழக்கில் நஜீப்பிற்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் RM210மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்ட கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை, மறுஆய்வு செய்யுமாறு கூட்டரசு நீதிமன்றத்திடம் கடந்த ஆகஸ்ட் 23, 2022 இல் நஜிப் விண்ணப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here