மனைவிக்கு தொல்லை கொடுத்ததாக சந்தேகிக்கப்பட்ட 2 பேரை வெட்டி காயப்படுத்திய நபரை தேடும் போலீசார்

செராஸில்  இருவரை வெட்டியதாக சந்தேகிக்கப்படும் உள்ளூர் நபரை போலீசார் தேடி வருகின்றனர். பகாங்கின் மெந்தகாப்பைச் சேர்ந்த 45 வயதான சந்தேக நபர், தனது மனைவியைத் தொந்தரவு செய்வதாகக் கருதப்படும் 22 மற்றும் 23 வயதுடைய இருவருடன் சண்டையிட்டதாக நம்பப்படுகிறது.

செராஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் ஜாம் ஹலீம் ஜமாலுதீன், இச்சம்பவம் குறித்து  அதிகாலை 4 மணியளவில் தனது தரப்புக்கு தகவல் கிடைத்தது. பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததும் உடனடியாக இடத்திற்கு விரைந்த செராஸ் காவல் நிலையத்தின் குற்றத்தடுப்பு ரோந்து உறுப்பினர்கள் இரண்டு உள்ளூர் ஆடவர்களை உள்ளடக்கிய சண்டை மற்றும் வெட்டுக்காய சம்பவம் நடந்ததைக் கண்டறிந்தனர்.  முதல் கட்ட விசாரணை முடிவுகளில், வெட்டப்பட்ட இருவரும் பலத்த காயம் அடைந்துள்ளனர் என்று கண்டறியப்பட்டது என்று அவர் கூறினார்.

ஜாம் ஹலீம் கூறுகையில், கிடைத்த தகவலின் அடிப்படையில் செராஸ் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் (ஐபிடி) குற்றப் புலனாய்வுப் பிரிவு (டி7) சிலாங்கூர், செராஸ், தாமன் ஶ்ரீ அமான் குடியிருப்புப் பகுதியில் 39 வயதான உள்ளூர் பெண்ணைக் கைது செய்தது.

சம்பவம் நடந்தபோது சம்பவம் நடந்த இடத்தில் சந்தேக நபருடன் இருந்ததால், இந்த வழக்கின் முக்கிய சந்தேக நபருடன் அவர் தொடர்பு கொண்டதைத் தொடர்ந்து இந்த பெண் கைது செய்யப்பட்டார் என்று அவர் கூறினார். இதனடிப்படையில், இந்த சம்பவம் தொடர்பில் எவ்வித ஊகங்களையும் வெளியிட வேண்டாம் என போலீசார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தகவல் தெரிந்த பொதுமக்கள், கோலாலம்பூர் காவல்துறையின் 03-21159999 என்ற எண்ணில் அல்லது செராஸ் காவல் துறையின் ஹாட்லைன் 03-92845050/5051 என்ற எண்ணில் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முன்னதாக, இந்த சண்டை சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here