இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படும் ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம், ஈப்போவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவர் அரை மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான இழப்பை சந்தித்தார்.
பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹசன் பஸ்ரி கூறுகையில், 59 வயதான குறித்த பெண்மணியின், நிதி ஆதாரத்தை விசாரிக்க வேண்டும் என்று, போலீஸ்காரர் என்று கூறப்படும் ஒருவருக்கு அழைப்பு மாற்றப்பட்டது என்றும், அவருக்கு ஒரு தனியார் மருத்துவமனையில் காப்பீட்டுக் கோரிக்கை இருப்பதாகவும் முதலில் கூறப்பட்டது.
பின்னர் பாதிக்கப்பட்டவரின் நிதி ஆதாரங்களை விசாரிப்பதற்காக, அந்தப் பெண்ணிடம் இருந்த முழுத் தொகையையும் அவரது வங்கி கணக்குகளில் ஏதாவது ஒன்றிற்கு மாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
பயம் மற்றும் பதட்டம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட ஆசிரியை, தனது ஏடிஎம் கார்டு விவரங்களையும் விசாரணைக்குத் தேவை எனக் கூறிய அந்த நபருக்கு அளித்துள்ளார்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பின்னர், பாதிக்கப்பட்ட பெண் தனது வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க விரும்பியபோது, அக்கணக்கில் இருந்த மொத்தம் RM585,904.22 எல்லாம் காணாமல் போய்விட்டதாகவும், காப்பீட்டு நிறுவனத்தால் தான் ஏமாற்றப்பட்டதாகவும் உணர்ந்தபோது, அவர் காவல்துறையில் புகார் அளித்ததாக கூறினார்.
எனவே, தொலைபேசி மோசடிக்கு ஆளாகாமல் இருக்கவும், தெரியாத தொலைபேசி எண்களில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் அல்லது செய்திகளுக்குப் பதிலளிக்கும்போது பொதுமக்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருக்குமாறு நினைவூட்டப்படுகிறார்கள்.
மேலும் “அழைப்பவர்களின் அடையாளத்தைக் கண்டறிய, ஹூஸ்கால், ட்ரூகாலர் அல்லது பிற செயலிகளைப் பயன்படுத்தவும், மோசடி செய்பவரிடமிருந்து நீங்கள் அழைப்பைப் பெறும்போது பீதி அடையவோ அல்லது பயப்படவோ வேண்டாம்.ல் என்றும் முகமட் யூஸ்ரி கூறினார்.