மலாக்காவில் நாளை நடைபெறும் மாநில செயற்குழு கூட்டத்திற்கு (MMKN) பிறகு பத்து மலாக்கா துணை நிர்வாக உறுப்பினர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று முதல்வர் டத்தோஸ்ரீ அப் ரவூப் யூசோ கூறினார். துணை உறுப்பினர்களின் நியமனம், ஒற்றுமை அரசாங்கத்தின் அமைப்பை பிரதிபலிக்கும் வகையில் பக்காத்தான் ஹராப்பான் (PH) பிரதிநிதிகளையும் உள்ளடக்கியிருக்கும் என்றார்.
அமைப்பு (துணை நிர்வாகிகள் பட்டியல்) அனைத்து தரப்பினரும் விரும்ப கூடிய வகையில் இருக்கும். மேலும் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் எனது நிர்வாகத்தின் கீழ் நியமிக்கப்பட்ட நிர்வாக குழு உறுப்பினர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் தங்கள் துணையைப் பெறுவார்கள்… நாளை அறிவிக்கப்படும் என்று அவர் மலாக்கா ஆளுநர் துன் முகமட் அலி ருஸ்தாம் முன் பதவியேற்பு விழாவுக்குப் பிறகு ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
துணை நிர்வாகிகள் நியமனம் வீணானது என்ற கூற்றுகள் குறித்து கருத்து தெரிவித்த அப்துல் ரவூப், இது தற்போதுள்ள மாநில அரசு நிர்வாகத்தைப் பொறுத்தது என்றார். தனது நிர்வாகத்தின் கீழ் உள்ள 10 இலாகாக்களுக்கான துணை நிர்வாகிகளை நியமிப்பது, மலாக்காவை அதிக உயரத்திற்கு மேம்படுத்துவதற்கு இரு பதவிகளுக்கும் இடையே நெருக்கமான ஒத்துழைப்பை உருவாக்குவதற்கான தற்போதைய தேவைகளுக்கு இணங்குவதாக அவர் கூறினார்.
அது அன்றைய தலைமையைப் பொறுத்தது. ஆனால் என்னைப் பொறுத்தவரை, இந்த நேரத்தில் எனக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பிரதிநிதிகளும் தேவை. என்னுடன் மலாக்காவை அபிவிருத்தி செய்ய அனைவருக்கும் ஒரு பங்கு வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.




















